sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பகலில் பெய்து வரும் மழையால் அறுவடை செய்ய முடியாமல் அவதி

/

பகலில் பெய்து வரும் மழையால் அறுவடை செய்ய முடியாமல் அவதி

பகலில் பெய்து வரும் மழையால் அறுவடை செய்ய முடியாமல் அவதி

பகலில் பெய்து வரும் மழையால் அறுவடை செய்ய முடியாமல் அவதி


ADDED : அக் 08, 2024 12:54 AM

Google News

ADDED : அக் 08, 2024 12:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம் முழுதும், 12,000 ஏக்கருக்கு மேல் சம்பா பருவ துவக்கத்தில், நெல் சாகுபடி செய்துள்ளனர். அவை, அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.

புரட்டாசி மாதத்தில், பொன் உருக வெயில் காயும், மண் உருக மழை பெய்யும்' என, சொல்வாடைக்கு ஏற்ப, சமீப நாட்களாக பகலில் கத்திரி வெயிலை போல சுட்டெரித்து வந்தது. இரவு மற்றும் மாலை நேரங்களில் அடிக்கடி மழை பெய்து வந்தன.

இந்நிலையில், இரு தினங்களாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பகலில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் வரை, 2 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

இந்த மழையால், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் அறுவடை செய்ய முடியாத நிலைக்கு, விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, கோவிந்தவாடி கிராம விவசாயிகள் கூறுகையில், பகலில் பெய்து வரும் மழையால், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்களை இயந்திரங்களின் உதவியுடன் அறுவடை செய்ய முடியவில்லை. மழை நின்ற பின்தான் நெற்கதிர்களை அறுவடை செய்ய முடியும்' என்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், அக்.,5ம் தேதி முதல் 6ம் தேதி வரையில், 2 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. குறிப்பாக, குன்றத்துார், வாலாஜாபாத் ஆகிய தாலுகாக்களில் தலா ஒரு செ.மீ., என, 2 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.






      Dinamalar
      Follow us