/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புதர்மண்டிய கால்வாய் சீரமைக்க எதிர்பார்ப்பு
/
புதர்மண்டிய கால்வாய் சீரமைக்க எதிர்பார்ப்பு
ADDED : செப் 24, 2024 08:05 AM

கீழம்பி : காஞ்சிபுரம் ஒன்றியம் கீழம்பி ஊராட்சி, அமராவதிபட்டினம் பிரதான சாலையில், அப்பகுதியில் உள்ள வீட்டு உபயோக கழிவுநீர் மற்றும் மழைநீர் வெளியேறும் வகையில் சாலையோரம் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கால்வாயை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காதததால், கால்வாயில் மண் திட்டுகளாலும், செடி, கொடிகள் புதர்போல மண்டியுள்ளதாலும் கால்வாய் துார்ந்த நிலையில் உள்ளது.
இதனால், மழைக்காலத்தில் கால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய மழைநீர் சாலையிலும், அப்பகுதியில் உள்ள வீடுகளையும் சூழும் நிலை உள்ளது.
எனவே, வடகிழக்கு பருவமழை துவங்குவதற்குள் அமராவதிபட்டினம் பிரதான சாலையில் உள்ள மழைநீர் வடிகால்வாயை முழுமையாக துார்வாரி சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.