sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

உடற்பயிற்சி கூடம் சீரமைக்க களக்காட்டூரில் எதிர்பார்ப்பு

/

உடற்பயிற்சி கூடம் சீரமைக்க களக்காட்டூரில் எதிர்பார்ப்பு

உடற்பயிற்சி கூடம் சீரமைக்க களக்காட்டூரில் எதிர்பார்ப்பு

உடற்பயிற்சி கூடம் சீரமைக்க களக்காட்டூரில் எதிர்பார்ப்பு


ADDED : டிச 23, 2024 01:37 AM

Google News

ADDED : டிச 23, 2024 01:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம் களக்காட்டூர் ஊராட்சி குருவிமலையில், கடந்த 2018ம் ஆண்டு, 30 லட்சம் ரூபாய் செலவில் அம்மா விளையாட்டு பூங்கா திறக்கப்பட்டது.

இதில், திறந்தவெளி மற்றும் உள்ளரங்க உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது. களக்காட்டூர் ஊராட்சியை சேர்ந்த இளைஞர்கள் உடற்பயிற்சி கூடத்தை பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், முறையான பராமரிப்பு இல்லாததால், உடற்பயிற்சி கூடத்தில் உள்ள ‛பிட்னஸ்' உபகரணங்கள் பல பழுதடைந்த நிலையில் உள்ளன. இதனால், உடற்பயிற்சி கூடத்திற்கு வரும் இளைஞர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

லட்சக்கணக்கான ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட உடற்பயிற்சி உபகரணங்கள், பயன்பாடின்றி வீணாகி வருகிறது. எனவே, உடற்பயிற்சி உபகரணங்களை பழுது நீக்கி பயன்பாட்டிற்கு கொண்டு வர, காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி இளைஞர்கள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us