/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாலாற்றில் வளர்ந்துள்ள மரங்களை அகற்ற விவசாயிகள் கோரிக்கை
/
பாலாற்றில் வளர்ந்துள்ள மரங்களை அகற்ற விவசாயிகள் கோரிக்கை
பாலாற்றில் வளர்ந்துள்ள மரங்களை அகற்ற விவசாயிகள் கோரிக்கை
பாலாற்றில் வளர்ந்துள்ள மரங்களை அகற்ற விவசாயிகள் கோரிக்கை
ADDED : நவ 21, 2024 11:25 PM

வாலாஜாபாத்:வாலாஜாபாத் அடுத்து, பழையசீவரம் பாலாற்று தடுப்பணை உள்ளது. இத்தடுப்பணை முதற்கொண்டு, பழவேரி, பினாயூர், சாத்தணஞ்சேரி வரையிலான பாலாற்று படுகைகளில், 10 ஆண்டுகளுக்கு முன், அரசு அனுமதி பெற்ற மணல் குவாரி இயங்கியது.
அப்போது, அரசு அனுமதித்த அளவை காட்டிலும், கூடுதலான துாரம் மற்றும் அதிக ஆழம் பள்ளம் போட்டு மணல் அள்ளப்பட்டதாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.
இதனால், மணல் குவாரி செயல்பட்ட பாலாற்று படுகைகளில், மணல் இல்லாத நிலை தற்போது வரை தொடர்கிறது.
மணல் இல்லாத அப்பாலாற்று படுகைகளில், தற்போது சீமை கருவேல மரங்கள் மற்றும் பல வகையான செடி, கொடிகள் வளர்ந்து புதராக காட்சி அளிக்கிறது.
இதனால், பாலாற்று படுகையில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, பாலாற்று பாசன விவசாய நிலங்கள் பாதிக்ககூடும் என, அப்பகுதி விவசாயிகள் அச்சப்படுகின்றனர்.
எனவே, பழையசீவரம் தடுப்பணை முதற்கொண்டு, பினாயூர் வரையிலான பாலாற்று படுகைகளில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை வேரோடு அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் வலியுறுத்தி உள்ளனர்.