/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
டிச.,6ல் 13 ஊராட்சிகளில் சமூக தணிக்கை கிராம சபை
/
டிச.,6ல் 13 ஊராட்சிகளில் சமூக தணிக்கை கிராம சபை
ADDED : நவ 27, 2024 08:57 PM
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன.
இந்த ஊராட்சிகளில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் மற்றும் பிரதமர் நினைவு குடியிருப்பு திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
வாரந்தோறும் சில ஊராட்சிகளை தேர்வு செய்து, வரவு - செலவு கணக்குகளை சமூக தணிக்கை செய்து, மாநில ஊரக வளர்ச்சி தணிக்கை சங்கத்திற்கு, அறிக்கை சமர்ப்பிப்பது வழக்கமாக உள்ளது.
தற்போது, 12வது சுற்றுக்கு முட்டவாக்கம், திருப்புட்குழி, புளியம்பாக்கம், தேவரியம்பாக்கம், நத்தாநல்லுார், போந்துார், தத்தனுார், மணிமங்கலம், மலைப்பட்டு, அனுமந்தண்டலம், இளநகர், களியப்பேட்டை, குருமஞ்சேரி ஆகிய 13 ஊராட்சிகளில், டிச.,6ல் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
இதில், மேற்கண்ட இரு திட்டங்களிலும் நிறைகள் மற்றும் குறைபாடுகளை பொது மக்கள் முன் சமர்ப்பிக்கப்பட உள்ளன.