/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
14 ஊராட்சிகளில் இன்று சமூக தணிக்கை கிராம சபை
/
14 ஊராட்சிகளில் இன்று சமூக தணிக்கை கிராம சபை
ADDED : பிப் 13, 2025 08:30 PM
காஞ்சிபுரம்காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் மற்றும் பிரதமர் நினைவு குடியிருப்பு திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
வாரந்தோறும் சில ஊராட்சிகளை தேர்வு செய்து, வரவு - செலவு கணக்குகளை தணிக்கை செய்து, மாநில ஊரக வளர்ச்சி தணிக்கை சங்கத்திற்கு, அறிக்கை சமர்ப்பிப்பது வழக்கமாக உள்ளது. தற்போது, 21வது சுற்றுக்கு கீழ்பேரமணல்லுார், வளத்தோட்டம், பரந்துார், பொடவூர், சிறுவள்ளூர், புள்ளலுார் உள்ளிட்ட 14 கிராமங்களில், இன்று சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.