/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பழையசீவரம் கோவிலில் கூழ்வார்த்தல் விழா
/
பழையசீவரம் கோவிலில் கூழ்வார்த்தல் விழா
ADDED : ஆக 18, 2025 12:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாலாஜாபாத்:பழையசீவரம், ஓம் சப்த ஈஸ்வரி கோவிலில் கூழ்வார்த்தல் விழா நேற்று கோலாகலமாக நடந்தது.
வாலாஜாபாத் ஒன்றியம், பழையசீவரத்தில் உள்ள ஓம் சப்த ஈஸ்வரி கோவிலில், ஆடி திருவிழா கடந்த வெள்ளி அன்று காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று, காலை 7:00 மணிக்கு ஈஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து, காலை 10:00 மணிக்கு, பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
மதியம் 2:00 மணிக்கு, பாலாற்றில் கங்கை திரட்டி அங்கிருந்து கோவிலை வந்தடைந்து கூழ்வார்த்தல் விழா நடைபெற்றது. இரவு 7:00 மணிக்கு மலர் அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது.