/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கல்லுாரி மாணவர்களுக்கு சுகாதார விழிப்புணர்வு
/
கல்லுாரி மாணவர்களுக்கு சுகாதார விழிப்புணர்வு
ADDED : நவ 12, 2024 07:06 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகளில், புகையிலை பயன்பாடு, புற்றுநோய், வாய் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் செந்தில் ,சுகாதார துறையினருக்கு அறிவுறுத்தி உள்ளார்.
அதன்படி, கீழம்பியில், திருமலை பொறியியல் கல்லுாரியில், புகையிலை பயன்பாடு, புற்றுநோய், வாய் சுகாதாரம், டெங்கு, தொழுநோய் குறித்து மாணவ - மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில், சுகாதார மேற்பார்வையாளர் சுந்தரமூர்த்தி, நலக் கல்வியாளர் கோபாலகிருஷ்ணன், ஆலோசகர் டாக்டர் ஸ்ரீராம், மருத்துவமல்லா மேற்பார்வையாளர் ஜெய்சுந்தர், சுகாதார ஆய்வாளர் சவரிமுத்து ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதை தொடர்ந்து மாணவ- - மாணவியர் புகையிலைக்கு எதிரான உறுதிமொழி ஏற்றனர்.

