sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

லஞ்சம் வாங்கிய சுகாதார ஆய்வாளர் சிக்கினார்

/

லஞ்சம் வாங்கிய சுகாதார ஆய்வாளர் சிக்கினார்

லஞ்சம் வாங்கிய சுகாதார ஆய்வாளர் சிக்கினார்

லஞ்சம் வாங்கிய சுகாதார ஆய்வாளர் சிக்கினார்

2


ADDED : ஏப் 24, 2025 01:52 AM

Google News

ADDED : ஏப் 24, 2025 01:52 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவர், குடிநீர் வியாபாரம் செய்ய, தடையில்லாத சான்று கேட்டு, காஞ்சிபுரம் மாநகராட்சியில் விண்ணப்பித்திருந்தார்.

வியாபாரத்திற்கு தடையில்லாத சான்று வழங்குவதற்கு, காஞ்சிபுரம் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் பிரகாஷ், 58. என்பவரை, நேரில் அணுகி உள்ளார்.

அவர், 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டு, சரவணனிடம் பேரம் பேசி உள்ளார். லஞ்சம் கொடுக்க மனமில்லாததால் சரவணன், காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், சரவணனிடம் 5,000 ரூபாய்க்கு ரசாயனம் தடவிய நோட்டுகளை கொடுத்து அனுப்பி உள்ளனர்.

நேற்று மாலை, சுகாதார ஆய்வாளர் பிரகாஷ், லஞ்ச பணம் வாங்கியபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us