sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

15 வரை தொழுநோய் விழிப்புணர்வு முகாம்

/

15 வரை தொழுநோய் விழிப்புணர்வு முகாம்

15 வரை தொழுநோய் விழிப்புணர்வு முகாம்

15 வரை தொழுநோய் விழிப்புணர்வு முகாம்


ADDED : ஜன 30, 2025 08:10 PM

Google News

ADDED : ஜன 30, 2025 08:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:மஹாத்மா காந்தியின் நினைவு நாளான ஜனவரி 30ம் தேதி, ஒவ்வொரு ஆண்டும் 'உலக தொழுநோய்' தினமாக அனுசரிக்கப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்திலும் ஜனவரி 30 முதல் பிப்ரவரி 15 வரை, இரு வார கால ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது.

அதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர், காஞ்சிபுரம், வாலாஜாபாத் மற்றும் குன்றத்துார் ஆகிய நான்கு ஒன்றியங்களில் தொழுநோய் கண்டறிதல் முகாம், பிப்ரவரி 13 - 28ம் தேதி வரை, வீடு வீடாகச் சென்று சுகாதார கள பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தொழுநோய் கண்டுபிடிப்பு பணி மேற்கொள்ள உள்ளனர்.

பள்ளி மாணவ - மாணவியரை தொழுநோய் பரிசோதனை செய்யப்பட உள்ளனர். இம்முகாம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடக்க, மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம், கலெக்டர் அலுவலக வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது.

தொடர்ந்து, தொழுநோய் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடந்தது. மருத்துவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உறுதிமொழியை எடுத்து கொண்டனர். இக்கூட்டத்தில் துணை இயக்குனர் (தொழுநோய்) கனிமொழி, இணை இயக்குநர் ஹிலாரினா ஜோசிட்டா நளினி, மாவட்ட சுகாதார அலுவலர் செந்தில் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us