ADDED : பிப் 14, 2025 10:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் அருகே, வட்டம்பாக்கம் காப்பு காட்டில், 55 வயது மதிக்கத்தக்க ஆண், துாக்கில் தொங்கியபடி சடலமாக இருப்பதாக, அவ்வழியாக சென்றவர்கள் ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஒரகடம் போலீசார் உடலை மீட்டு, பிரேத பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, இறந்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.