sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஓரிக்கையில் சாலை சேதம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்

/

ஓரிக்கையில் சாலை சேதம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்

ஓரிக்கையில் சாலை சேதம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்

ஓரிக்கையில் சாலை சேதம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்


ADDED : ஜன 11, 2025 11:18 PM

Google News

ADDED : ஜன 11, 2025 11:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மிலிட்டரி சாலையில், ஓரிக்கை பாலாறு மேம்பாலத்திற்கு செல்லும் சின்னய்யங்குளம் சாலை உள்ளது. இச்சாலை வழியாக அண்ணா குடியிருப்பு, தாண்டராயன் நகர், ஓரிக்கை பழைய காலனி, திருவேகம்பன் நகர், அரசு பள்ளி உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர்.

வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் மிகுந்த இச்சாலையில், ஓரிக்கை அரசு ஆதிதிராவிடர் நல துவக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி அருகே, ஜல்லிக் கற்கள் பெயர்ந்து, சாலை குண்டும் குழியுமாக, புழுதி பறந்து வருகிறது.

இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி பஞ்சராகின்றன. மழைக்காலத்தில் சாலையில் உள்ள பள்ளத்தில் மழைநீர் குளம்போல தேங்குகிறது. இதனால், பள்ளி செல்லும் மாணவ - -மாணவியர் மட்டுமின்றி, இருசக்கர வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

எனவே, சேதமடைந்த சின்னய்யங்குளம் காலனிக்கு செல்லும் பிரதான சாலையை சீரமைக்க, மாவட்ட நிர்வகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us