sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 தேசிய அளவிலான கராத்தே போட்டி : காஞ்சி மாணவ - மாணவியர் சிறப்பிடம்

/

 தேசிய அளவிலான கராத்தே போட்டி : காஞ்சி மாணவ - மாணவியர் சிறப்பிடம்

 தேசிய அளவிலான கராத்தே போட்டி : காஞ்சி மாணவ - மாணவியர் சிறப்பிடம்

 தேசிய அளவிலான கராத்தே போட்டி : காஞ்சி மாணவ - மாணவியர் சிறப்பிடம்


ADDED : நவ 14, 2025 10:46 PM

Google News

ADDED : நவ 14, 2025 10:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: ஈரோடில் நடந்த தேசிய அளவிலான கராத்தே போட்டியில், காஞ்சிபுரம் மாணவ - மாணவியர் சிறப்பிடம் பெற்றனர்.

இக்கோவாஷி கராத்தே டூ அசோஷியேசன் ஆப் இந்தியா சார்பில், தேசிய அளவிலான கராத்தே போட்டி, ஈரோடு மாவட்டம் டெக்ஸ்ட்வேல் உள்ளரங்கில் கடந்த 9ம் தேதி நடந்தது.

இதில், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா என, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 1,200க்கும் மேற்பட்ட மாணவ - -மாணவியர் பங்கேற்றனர்.

இப்போட்டியில், காஞ்சிபுரம் இக்கோவாஷி கராத்தே டூ அசோஷியேசன் ஆப் இந்தியா பயிற்சி பள்ளியின் தலைமை கராத்தே பயிற்சியாளர் பிரபாகரன் தலைமையில் 7 மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.

இதில், காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே.வி., மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி 6ம் வகுப்பு மாணவி ஹேமாவதி, கட்டா பிரிவில் முதல் பரிசு பெற்றார். காஞ்சி குளோபல் பள்ளி 8ம் வகுப்பு மாணவர் ஸ்ரீவைகுண்டர், குமித்தே பிரிவில் முதலிடம் பெற்றார்.

குருஷேத்ரா பப்ளிக் பள்ளி 6ம் வகுப்பு மாணவர் கேசவ், இன்பன்ட்ஜீசஸ் பள்ளி 9ம் வகுப்பு மாணவர் நித்திஷ். பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 9ம் வகுப்பு மாணவர் ரோஹித், அந்திரசன் மேல்நிலைப் பள்ளி 8ம் வகுப்பு மாணவர் ரித்திக், திருக்காலிமேடு அரசு உயர்நிலைப் பள்ளி 8ம் வகுப்பு மாணவர் முகிலன் ஆகியோர் குமித்தே பிரிவில் இரண்டாம் பரிசு பெற்றனர்.

வெற்றி பெற்றவ மாணவ - மாணவியருக்கு உலக கராத்தே சங்க நடுவர் சம்பத்குமார், ட்ரெடிஷ்னல் ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்க தலைவர் செழியன் ஆகியோர் கோப்பை, சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.






      Dinamalar
      Follow us