sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மின் கம்பத்தில் பைக் மோதி வடமாநில தொழிலாளி பலி

/

மின் கம்பத்தில் பைக் மோதி வடமாநில தொழிலாளி பலி

மின் கம்பத்தில் பைக் மோதி வடமாநில தொழிலாளி பலி

மின் கம்பத்தில் பைக் மோதி வடமாநில தொழிலாளி பலி


ADDED : மார் 15, 2024 12:30 AM

Google News

ADDED : மார் 15, 2024 12:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:அசாம் மாநிலம், தின்சுகியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜேக்கப் சோனா, 31. ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, வல்லம் பகுதியில் தங்கி, ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளராக வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலை, பப்பு, 29, என்பவருடன், ஆத்துாரில் உள்ள ஒப்பந்த மேற்பார்வையாளரிடம் ஊதியம் வாங்கிக் கொண்டு, இருவரும் மது அருந்திவிட்டு, ஸ்ரீபெரும்புதுார் அடுத்த மலைப்பட்டு கிராமத்தில் உள்ள நண்பரை சந்திக்க, 'ஹோண்டா யுனிகான்' பைக்கில் சென்றார்.

பிள்ளைப்பாக்கம் அருகே வந்தபோது, மதுபோதையில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில், ஜேக்கப் சோனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பப்பு தலையில் காயங்களுடன் உயிர் தப்பினார்.

ஸ்ரீபெரும்புதுார் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us