sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ரூ.1,000 லஞ்சம் வாங்கிய அரசு ஊழியருக்கு 'ஓராண்டு'

/

ரூ.1,000 லஞ்சம் வாங்கிய அரசு ஊழியருக்கு 'ஓராண்டு'

ரூ.1,000 லஞ்சம் வாங்கிய அரசு ஊழியருக்கு 'ஓராண்டு'

ரூ.1,000 லஞ்சம் வாங்கிய அரசு ஊழியருக்கு 'ஓராண்டு'


ADDED : அக் 18, 2024 08:22 PM

Google News

ADDED : அக் 18, 2024 08:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:செங்கல்பட்டு மாவட்டம், மல்ரோசாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜான். இவர், காஞ்சிபுரம் கதர் கிராம தொழில்கள் அலுவலகத்தில், பிரதமர் வேலைவாய்ப்பு திட்டத்தில் கடன் பெற, கடந்த 2008ல் மனு அளித்தார்.

இந்த அலுவலகத்தில், தேனீ பிரிவுக்கான பீல்ட் ஆபிசராக பணியாற்றி வந்த சக்கரை என்பவரை தொடர்பு கொண்டார். அப்போது, மனு மீது நடவடிக்கை எடுக்க, 1,000 ரூபாய் லஞ்சமாக தர வேண்டும் என, சக்கரை கேட்டுள்ளார்.

லஞ்சம் தர மறுத்த ஜான், காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தார். இதையடுத்து, 2009 ஜனவரி 7ம் தேதி, லஞ்ச பணம் 1,000 ரூபாயை சக்கரை பெற்றபோது, போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.

இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். காஞ்சிபுரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது.

விசாரணை முடிந்த நிலையில், குற்றம் நிருபிக்கப்பட்டதால், கைது செய்யப்பட்ட சக்கரை என்பவருக்கு, ஓராண்டு சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி வசந்தகுமார் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us