sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வாலாஜாபாதில் ரூ.9.5 கோடியில் தடுப்பணை, அணைக்கட்டு திறப்பு

/

வாலாஜாபாதில் ரூ.9.5 கோடியில் தடுப்பணை, அணைக்கட்டு திறப்பு

வாலாஜாபாதில் ரூ.9.5 கோடியில் தடுப்பணை, அணைக்கட்டு திறப்பு

வாலாஜாபாதில் ரூ.9.5 கோடியில் தடுப்பணை, அணைக்கட்டு திறப்பு


ADDED : அக் 05, 2024 12:29 AM

Google News

ADDED : அக் 05, 2024 12:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகாவிற்கு உட்பட்ட தொள்ளாழி கிராமத்தில் உள்ள மடுவின் குறுக்கே அணைக்கட்டு கட்ட விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து, 7 கோடி ரூபாய் மதிப்பில், புதிய அணைக்கட்டு கட்டும் பணியை, நீர்வள ஆதாரத் துறையினர் கடந்த ஆண்டு தொடங்கினர்.

பணிகள் முடிக்கப்பட்டு, தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையிலிருந்து, காணொலி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார். தொள்ளாழி கிராமத்தில் நடந்த திறப்பு விழா நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, உத்திரமேரூர் தி.மு.க.,- - எம்.எல்.ஏ., சுந்தர் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

இந்த அணைக்கட்டு வாயிலாக மழைக்காலத்தில் வீணாக செல்லும் வெள்ளநீர் தடுத்து, தொள்ளாழி, தோனாகுளம், உள்ளாவூர் ஆகிய கிராமங்களில் உள்ள 291 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.

இந்த அணைக்கட்டு, 27 மீட்டர் நீளமும், 1.48 மீட்டர் உயம் கொண்டது. அணைக்கட்டில் 5,392 கன அடிக்கு நீர் சேகரமாகும் எனவும், 4,797 கன அடிநீர் வெளியேறும் என, நீர்வள துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல, உத்திரமேரூர் தாலுகாவிற்குட்பட்ட, இருமரம் கிராமத்தில், புத்தளி மடுவில், 2.5 கோடி ரூபாய் மதிப்பில், தடுப்பணை கட்டி நேற்று திறக்கப்பட்டது. இதன் வாயிலாக, 0.3 டி.எம்.சி., தண்ணீர் சேமிக்க முடியும்.






      Dinamalar
      Follow us