sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டம் வளர்ச்சி பணிகளை விரைவாக முடிக்க உத்தரவு

/

'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டம் வளர்ச்சி பணிகளை விரைவாக முடிக்க உத்தரவு

'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டம் வளர்ச்சி பணிகளை விரைவாக முடிக்க உத்தரவு

'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டம் வளர்ச்சி பணிகளை விரைவாக முடிக்க உத்தரவு


ADDED : மார் 20, 2025 12:57 AM

Google News

ADDED : மார் 20, 2025 12:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஒவ்வொரு மாதமும், மூன்றாவது புதன்கிழமைகளில், 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' என்ற திட்டத்தின் வாயிலாக, ஒவ்வொரு தாலுகாவிலும், கலெக்டர் கலைச்செல்வி தங்கி ஆய்வு நடத்தி வருகிறார்.

மார்ச் மாதத்திற்கான, 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாமிற்கு, காஞ்சிபுரம் தாலுகா தேர்வு செய்யப்பட்டது. இம்மாதம் 19ம் தேதியன்று ஆய்வு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, காஞ்சிபுரம் தாலுகாவிற்குட்பட்ட பல்வேறு இடங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி நேற்ற ஆய்வு செய்தார்.

காஞ்சிபுரம் காலாண்டர் தெருவில் உள்ள மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் காப்பகத்திலும், சுப்பராய முதலியார் மேல்நிலைப் பள்ளியிலும் காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி ஆய்வு செய்தார்.

வேகவதி ஆற்றில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலத்தை பார்வையிட்ட அவர், பணிகளை வேகமாக முடிக்க, கமிஷனர் நவேந்திரனிடம் அறிவுறுத்தினார்.






      Dinamalar
      Follow us