sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

குமரகோட்டம் முருகன் கோவில் தேரின் குடை சாய்ந்ததால் பீதி

/

குமரகோட்டம் முருகன் கோவில் தேரின் குடை சாய்ந்ததால் பீதி

குமரகோட்டம் முருகன் கோவில் தேரின் குடை சாய்ந்ததால் பீதி

குமரகோட்டம் முருகன் கோவில் தேரின் குடை சாய்ந்ததால் பீதி


ADDED : ஏப் 24, 2025 01:41 AM

Google News

ADDED : ஏப் 24, 2025 01:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், குமரகோட்டம் முருகன் கோவிலில், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையன்று, கோவில் உட்பிரகாரத்தில் வெள்ளி தேரோட்டம் நடைபெறும்.

இதில், வள்ளி, தெய்வானையருடன் மலர் அலங்காரத்தில், முருகப் பெருமான் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி தேரில் எழுந்தருளி பவனி வருவார். அதன்படி, நேற்று முன்தினம், இரவு 7:45 மணிக்கு, கோவிலில் வழக்கம்போல வெள்ளி தேரோட்டம் நடந்தது.

இதில், பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றபோது, தேரின் உச்சியில் இருந்த குடை திடீரென சாய்ந்ததால், பக்தர்கள் பீதி அடைந்தனர். எனினும், கீழே விழாததால், யாருக்கும் பாதிப்பு இல்லை.

இதுகுறித்து காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவில் செயல் அலுவலர் கேசவன் கூறியதாவது:

குமரகோட்டம் கோவிலில் திருப்பணி நடந்து வருகிறது. கட்டுமானப் பணியை மறைப்பதற்காக கட்டப்பட்டிருந்த பச்சை நிற துணி தொங்கியவாறு இருந்துள்ளது.

தேர் செல்லும்போது, அந்த துணி தேரின் குடையில் சிக்கியுள்ளது. துணிதானே, தானாக விடுபட்டுவிடும் என, தேரை இழுத்துள்ளனர். அப்போது துணியில் சிக்கிய குடை சாய்ந்ததே தவிர, முற்றிலும் விழவில்லை. லேசாக சாய்ந்த தேர் குடை, கோவில் நிர்வாகம் சார்பில், உடனடியாக சீரமைக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us