sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் தடத்தில் கூடுதல் பஸ் இயக்க பயணியர் கோரிக்கை

/

வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் தடத்தில் கூடுதல் பஸ் இயக்க பயணியர் கோரிக்கை

வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் தடத்தில் கூடுதல் பஸ் இயக்க பயணியர் கோரிக்கை

வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் தடத்தில் கூடுதல் பஸ் இயக்க பயணியர் கோரிக்கை


ADDED : செப் 29, 2025 11:42 PM

Google News

ADDED : செப் 29, 2025 11:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலாஜாபாத்;வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் தடத்தில், கூடுதல் பேருந்துகள் இயக்க, பயணியர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

வா லாஜாபாத்தில் இருந்து சுங்குவார்சத் திரம் செல்லும் சாலையில், ஊத்துக்காடு, நாய்க்கன்குப்பம், கட்டவாக்கம், தென்னேரி, மஞ்சமேடு, அய்மிச்சேரி, குண்ணம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இக்கிராமங்களைச் சேர்ந்தோர் சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார் இடையிலான கிராமங்களுக்கு, பல்வேறு காரணங்களாக தினமும் பயணிக்கின்றனர்.

இச்சாலையொட்டி உள்ள கிராமங்களில், தனியார் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இந்த தொழிற்சாலைகளில், வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் சாலை இடையிலான கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் இரவு, பகலாக சிப்ட் முறையில் பணியாற்றுகின்றனர்.

மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தோர், வாலாஜாபாத் வழியாக சுங்குவார்சத்திரம் சென்று, அங்கிருந்து பேருந்து பிடித்து, ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி போன்ற பகுதிகளுக்கு பணி நிமித்தமாக சென்று வருகின்றனர்.

இந்நிலையில், வாலாஜாபாத்தில் இருந்து சுங்குவார்சத்திரம் செல்ல, ஒரு தனியார் பேருந்து மற்றும் ஒரு அரசு பேருந்து குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் இயங்குகிறது.

காலை மற்றும் மாலை நேரத்தில், போதிய அரசு பேருந்துகள் இயக்காததால், ஆட்டோ அல்லது தனியார் பேருந்துகள் மூ லம் மக்கள் பயணிக்கும் நிலை ஏற்படுகிறது.

இத னால், பள்ளி மாணவ - மாணவியர் இலவச பஸ் பாஸ் இருந்தும் கட்டணம் செலுத்தி பயணிக்கும் நிலை உள்ளது.

போக்குவரத்து பிரச்னையால் பல தரப்பினரும் குறித்த நேரத்திற்கு குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல இயலாமல் தவித்து வருகின்றனர்.

எனவே, வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் இடையே, காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதலாக பேருந்து வசதி ஏற்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us