sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சேந்தமங்கலம் ஏரிக்கரையில் 1,100 பனை விதைகள் நடவு

/

சேந்தமங்கலம் ஏரிக்கரையில் 1,100 பனை விதைகள் நடவு

சேந்தமங்கலம் ஏரிக்கரையில் 1,100 பனை விதைகள் நடவு

சேந்தமங்கலம் ஏரிக்கரையில் 1,100 பனை விதைகள் நடவு


ADDED : அக் 29, 2024 08:09 PM

Google News

ADDED : அக் 29, 2024 08:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:விதைகள் சுற்றுச்சூழல் தன்னார்வ அமைப்பு சார்பில், நான்காவது ஆண்டாக ஒரு லட்சம் பனை விதைகளை நடவு செய்யும் துவக்க விழா செப்., 8ம் தேதி வயலக்காவூர் ஏரிக்கரையில் துவங்கியது. இதில், ஒரே நாளில் 10,000க்கும் மேற்பட்ட பனை விதைகளை ஒரே நாளில் நடவு செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக சேர்காடு, பண்ருட்டி, திருவாங்கரணை ஏரிக்கரையிலும், வாலாஜாபாத் அரசு மருத்துவமனை வளாகத்திலும் பனை விதை நடவு செய்து, குறுங்காடு அமைக்க 1,000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

ஏழாவது வார களப்பணியாக சேந்தமங்கலம் ஏரிக்கரையில் பனை விதை நடவு செய்யும் திருவிழா நேற்று நடந்தது. இதில், டாக்டர் ஆனந்த், பனை விதை நடவு செய்யும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

இதில், திரிவேணி அகாடமி தேசிய பசுமை படை மாணவர்கள், விதைகள் தன்னார்வ அமைப்பினர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலர் வெங்கடேசன் உள்ளிட்டோர், 1,100 பனை விதைகளை நடவு செய்தனர்.






      Dinamalar
      Follow us