/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கால்வாயில் செடி, கொடிகள் மழைநீர் செல்வதில் சிக்கல்
/
கால்வாயில் செடி, கொடிகள் மழைநீர் செல்வதில் சிக்கல்
கால்வாயில் செடி, கொடிகள் மழைநீர் செல்வதில் சிக்கல்
கால்வாயில் செடி, கொடிகள் மழைநீர் செல்வதில் சிக்கல்
ADDED : செப் 14, 2025 02:13 AM

பூசிவாக்கம்:செடி, கொடிகள் வளர்ந்து துார்ந்த நிலையில் உள்ள பாவாசாகிபேட்டை நீர் வரத்து கால்வாயில் மழைநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
வாலாஜாபாத் ஒன்றியம், பூசிவாக்கம் ஊராட்சியில், மழைநீர் வெளியேறும் வகையில் பாவாசாகிபேட்டை வரத்து கால்வாய் உள்ளது. இக்கால்வாயை பராமரிக்காததால், கால்வாயில் செடி, கொடிகள் வளர்ந்து உள்ளது.
மழை பெய்தால், கால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய மழை நீர், குடியிருப்புகளை சூழும் நிலை உள்ளது.
எனவே, வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன், பாவாசாகிபேட்டை வரத்து கால்வாயை துார்வாரி சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.