/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அரை நிர்வாணமாக அட்டகாசம் மாங்காடு போலீஸ்காரர் கைது
/
அரை நிர்வாணமாக அட்டகாசம் மாங்காடு போலீஸ்காரர் கைது
அரை நிர்வாணமாக அட்டகாசம் மாங்காடு போலீஸ்காரர் கைது
அரை நிர்வாணமாக அட்டகாசம் மாங்காடு போலீஸ்காரர் கைது
ADDED : பிப் 06, 2025 10:09 PM
மாங்காடு:மாங்காடு அடுத்த மவுலிவாக்கம், ராஜராஜன் நகரில் வசிப்பவர் ஆனந்த், 38; கோயம்பேடு போக்குவரத்து காவல் பிரிவில் தலைமை காவலர்.
சில நாட்களாக, அதீத போதையில், அப்பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகளின் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை அடித்து நொறுக்கி வந்துள்ளார்.
அதுமட்டுமின்றி, அருகாமை வீட்டினரின் கதவுகளை தட்டி உடைப்பதும், வீடுகளுக்குள் புகுந்து, பொருட்களை துாக்கி வீசுவதுமாக, அட்டூழியம் செய்துள்ளார். தான் போலீஸ் எனக்கூறி, மற்றவர்களையும் மிரட்டி வந்துள்ளார்.
குறிப்பாக, இரவில் பெண்கள் இருக்கும் வீடுகளின் கதவை தட்டி, அரை நிர்வாணமாக நின்று தொல்லை தருவதாக, அவர் மீது மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், புகார் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, அப்பகுதிவாசிகள், போரூர் அருகே பாய்கடை சந்திப்பில் போராட்டத்திலும் ஈடுப்பட்டனர்.
இதையடுத்து மாங்காடு போலீசார், நான்கு பிரிவுகளில் வழக்கு பதிந்து, போலீஸ்காரர் ஆனந்தை, நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
விசாரணையில், ஆனந்திற்கு திருமணமாகி, குழந்தை இல்லாததால் விவாகரத்து ஆகியுள்ளது. வேறு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு இடையில் நின்றதாக கூறப்படுகிறது.
இதனால், மன உளைச்சலில் இருந்த ஆனந்த், போதையில் இதுபோன்ற செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

