/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செடிகள் வளர்ந்துள்ள வடிகால்வாய் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
/
செடிகள் வளர்ந்துள்ள வடிகால்வாய் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
செடிகள் வளர்ந்துள்ள வடிகால்வாய் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
செடிகள் வளர்ந்துள்ள வடிகால்வாய் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
ADDED : டிச 03, 2025 06:37 AM

காஞ்சிபுரம்: கருப்படிதட்டடை ஊராட்சி, காந்தி நகரில் செடி, கொடிகள் வடிகால்வாயில் வளர்ந்துள்ளதால், மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் ஒன்றியம், கருப்படிதட்டடை ஊராட்சி, காந்தி நகர், இரண்டாவது தெருவில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில், வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாயை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், செடி, கொடிகள் வளர்ந்து துார்ந்த நிலையில் உள்ளது.
இதனால், காஞ்சிபுரத்தில் பலத்த மழை பெய்தால், வடிகால்வாய் வாயிலாக மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, மழைநீர் வடிகால்வாயில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என, அப் பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

