sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 ஜல்லி கற்கள் பெயர்ந்த சாலை வெங்காடில் வாகன ஓட்டிகள் அவதி

/

 ஜல்லி கற்கள் பெயர்ந்த சாலை வெங்காடில் வாகன ஓட்டிகள் அவதி

 ஜல்லி கற்கள் பெயர்ந்த சாலை வெங்காடில் வாகன ஓட்டிகள் அவதி

 ஜல்லி கற்கள் பெயர்ந்த சாலை வெங்காடில் வாகன ஓட்டிகள் அவதி


ADDED : டிச 03, 2025 06:37 AM

Google News

ADDED : டிச 03, 2025 06:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்: ஜல்லி கற்கள் பெயர்ந்து, மோசமாக உள்ள வெங்காடு சாலையை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் வெங்காடு ஊராட்சி உள்ளது. இப்பகுதி மக்கள், வெங்காடு பிரதான சாலை வழியே, ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார் பல்வேறு பகுதிகளுக்கு உள்ளிட்ட சென்று வருகின்றனர்.

பிள்ளைப்பாக்கம் சிப்காட் தொழிற்பூங்காவின் ஒரு பகுதியாக உள்ள வெங்காடு கிராமத்தில், 50க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

வெங்காடு பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு, மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தி பொருட்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் வெங்காடு சாலை வழியே சென்று வருகின்றன.

கனரக வாகனங்கள் அதிகம் செல்லும் இந்த சாலையில், ஜல்லி கற்கள் பெயர்ந்து, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் சாலை மாறியது.

இந்த நிலையில், தற்போது பரவலாக மழை பெய்து வரும் நிலையில், குண்டும் குழியுமான சாலை நடுவே உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி உள்ளது.

இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள், பல்லாங்குழியான சாலையில் செல்லும் போது, நிலைத்தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.

எனவே, ஜல்லி கற்கள் பெயர்ந்து, வாகனங்கள் செல்வதற்கே லாயக்கற்ற நிலையில் உள்ள வெங்காடு சாலையை சீரமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் வெங் காடு பகுதி மக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us