/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வடிகால்வாய் அமைக்க புத்தேரிவாசிகள் கோரிக்கை
/
வடிகால்வாய் அமைக்க புத்தேரிவாசிகள் கோரிக்கை
ADDED : ஜன 21, 2025 01:14 AM

புத்தேரி, காஞ்சிபுரம் ஒன்றியம் புத்தேரி ஊராட்சியில் உள்ள பிரதான சாலையில், வீட்டு உபயோக கழிவுநீர் வெளியேறும் வகையில் மண் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
முறையான பராமரிப்பு இல்லாததால், இக்கால்வாயில் மண் திட்டுகளாலும், செடி, கொடிகள் மண்டியுள்ளதால், கழிவுநீர் முழுமையாக வெளியேற வழியில்லாமல் தேங்கியுள்ளது.
இதனால், அப்பகுதியில்கொசுத் தொல்லை அதிகரித்து இருப்பதாக,அப்பகுதிவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், மழைக்காலங்களில் மழைநீரும், கழிவுநீரும் கலந்து நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, மண் கால்வாயை கான்கிரீட் கால்வாயாக அமைக்க, புத்தேரி ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

