sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கொசஸ்தலை ஆறு தரைப்பாலத்தில் தடுப்பு அமைக்க வேண்டுகோள்

/

கொசஸ்தலை ஆறு தரைப்பாலத்தில் தடுப்பு அமைக்க வேண்டுகோள்

கொசஸ்தலை ஆறு தரைப்பாலத்தில் தடுப்பு அமைக்க வேண்டுகோள்

கொசஸ்தலை ஆறு தரைப்பாலத்தில் தடுப்பு அமைக்க வேண்டுகோள்


ADDED : ஜூன் 23, 2025 01:56 AM

Google News

ADDED : ஜூன் 23, 2025 01:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெமிலி:நெமிலி கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே செல்லும் தரைப்பாலத்தின் இருபுறமும் தடுப்பு ஏற்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியம், சேந்தமங்கமலம் கிராமத்தில் இருந்து, நெமிலி பேரூராட்சி வழியாக, பானாவாரம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் குறுக்கே, மூன்று மீட்டர் நீளத்திற்கு கொசஸ்தலை ஆற்று தரைப்பாலம் செல்கிறது.

இந்த தரைப்பாலத்தின் வழியாக, காஞ்சிபுரத்தில் இருந்து, சேந்தமங்கலம் வழியாக பானாவாரம், சோளிங்கர் வரை மற்றும் பணப்பாக்கம், சோளிங்கர், சேந்தமங்கலம் வழியாக, காஞ்சிபுரம் அரசு மற்றும் தனியார் தொழிற்சாலை வாகனங்கள் செல்கின்றன.

கொசஸ்தலை ஆற்று தரைப்பாலத்தின் இருபுறமும் தடுப்புகள் இல்லை. இதனால், வாகனங்கள் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தாலும், ஆற்றில் கவிழும் அபாயம் உள்ளது.

மேலும், தரைப்பாலத்தின் ஓரம் கோழிக்கழிவு, குப்பை மற்றும் பிற கழிவுகளை கொட்டுவதால், வாகன ஓட்டிகள் துர்நாற்றத்தில், தரைப்பாலத்தை கடந்து செல்ல வேண்டி உள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, தரைப்பாலத்தை உயர் மட்ட பாலமாகவும். தரைப்பாலத்தின் இருபுறமும் தடுப்பு ஏற்படுத்த வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us