/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சீத்தனஞ்சேரி கோவில் உண்டியல் வசூல் ரூ.2.43 லட்சம்
/
சீத்தனஞ்சேரி கோவில் உண்டியல் வசூல் ரூ.2.43 லட்சம்
சீத்தனஞ்சேரி கோவில் உண்டியல் வசூல் ரூ.2.43 லட்சம்
சீத்தனஞ்சேரி கோவில் உண்டியல் வசூல் ரூ.2.43 லட்சம்
ADDED : நவ 28, 2025 04:19 AM
உத்திரமேரூர்: சீத்தனஞ்சேரியில், காலீஸ்வரர் கோவில் உண்டியல் மூலம், 2.43 லட்சம் ரூபாய் காணிக்கை கிடைத்தது.
உத்திரமேரூர் தாலுகா, சீத்தனஞ்சேரியில் காலீஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலான இக்கோவிலுக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர்.
அவ்வாறு வரும் பக்தர்கள், தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற, அங்குள்ள உண்டியல்களில் காணிக்கை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், காலீஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணி, உத்திரமேரூர் சரக ஹிந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் ப்ரீத்திகா முன்னிலையில் நேற்று முன்தினம் நடந்தது.
கோவில் உண்டியலில் காணிக்கையாக, 2.43 லட்சம் ரூபாய் இருந்தது.
இந்த காணிக்கை பணம் கோவில் நிர்வாக வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டது.

