/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையில் ஆறாக ஓடும் கழிவுநீர் ஓராண்டாக தொடரும் அவலம்
/
சாலையில் ஆறாக ஓடும் கழிவுநீர் ஓராண்டாக தொடரும் அவலம்
சாலையில் ஆறாக ஓடும் கழிவுநீர் ஓராண்டாக தொடரும் அவலம்
சாலையில் ஆறாக ஓடும் கழிவுநீர் ஓராண்டாக தொடரும் அவலம்
ADDED : செப் 24, 2024 08:08 AM

ஸ்ரீபெரும்புதுார்: சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், வாலாஜாபாத் -- மப்பேடு நெடுஞ்சாலை இணையும்சுங்குவார்சத்திரம் பகுதி யில் மேம்பாலாம்உள்ளது.
இந்த சாலை வழியே, வாலாஜாபாத், காஞ்சிபுரம்மற்றும் திருவள்ளூர், அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த நிலையில், சுங்கு வார்சத்திரம் நான்கு சாலை சந்திப்பில் இயங்கி வரும் உணவகங்கள், இறைச்சி கடைகள், சிறு, குறு வணிக கடைகள்மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மேம்பாலத்தின் கீழ் ஓராண்டாக சாலையில் ஆறாக வழிந்தோடுகிறது.
இதனால், அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கழிவுநீரில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள்வழுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும், சுங்குவார்சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து, சுற்றியுள்ள தொழிற்சாலைகளுக்கு அவ்வழியாக நடந்துசெல்லும் பாதசாரிகள், தொற்று நோய் பரவும் அச்சத்தில், கழிவுநீரில் நடந்து சென்று வருகின்றனர்.
எனவே, சாலையில் வழிந்தோடும் கழிவுநீரை தடுக்க, மேம்பாலத்தின் கீழ் கழிவுநீர் கால்வாய் அமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.