sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பஸ் கண்ணாடிஉடைப்பு மாணவர்கள் அட்டகாசம்

/

பஸ் கண்ணாடிஉடைப்பு மாணவர்கள் அட்டகாசம்

பஸ் கண்ணாடிஉடைப்பு மாணவர்கள் அட்டகாசம்

பஸ் கண்ணாடிஉடைப்பு மாணவர்கள் அட்டகாசம்


ADDED : டிச 07, 2024 01:03 AM

Google News

ADDED : டிச 07, 2024 01:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி, ஆவடியில் இருந்து கீழ் கொண்டையார் பகுதிக்கு, தடம் எண்: 120இ மற்றும் 61இ பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், கீழ் கொண்டையாரில் இருந்து ஆவடிக்கு, நேற்று காலை 8:00 மணியளவில் தடம் எண்: 61இ பேருந்து, 60க்கும் மேற்பட்ட பயணியருடன் வந்தது.

பேருந்தில் ஓட்டுநர் உமாபதி, 50, நடத்துனர் ஜனார்த்தனன், 35, ஆகியோர் பணியில் இருந்தனர்.

பேருந்து, காலை 9:30 மணியளவில் ஆவடி பேருந்து நிலையம் வந்தபோது, மாணவர்கள் சிலர் பேருந்தின் பின்பக்க கண்ணாடியை கல் வீசி உடைத்தனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. இதுகுறித்து, ஆவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

 கடந்த வாரம், தடம் எண்: 120இ வழித் தடத்தில், பள்ளி மாணவர்கள், பேருந்து படிக்கட்டில் நின்று, பாட்டு பாடி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். பயணியர் சிலர், அவர்களை பிடித்து ஆவடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அந்த மாணவர்களை எச்சரித்து அனுப்பினர்.

இந்த நிலையில், பஸ் மீது கல்வீச்சு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, போலீசார் ரோந்து பணியை துரிதப்படுத்த வேண்டும் என, பயணியர் கோரிக்கை வைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us