/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
டி-20 கிரிக்கெட் போட்டி 100 சிறப்பு பஸ் இயக்கம்
/
டி-20 கிரிக்கெட் போட்டி 100 சிறப்பு பஸ் இயக்கம்
ADDED : ஜன 25, 2025 03:05 AM
சென்னைசென்னை மாநகர போக்குவரத்து கழகநிர்வாக இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்ட அறிக்கை:
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே, இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டி சென்னை, எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டு மைதானத்தில் இன்று நடக்கிறது.
எனவே, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன், கூடுதலாக 100 சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.மேலும், தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்திடம் மாநகர போக்குவரத்துக் கழகம் உரிய பயணக் கட்டணம் பெற்றுக் கொண்டதன் அடிப்படையில், ரசிகர்கள் இலவசமாக பயணிக்கலாம்.
ரசிகர்கள் கிரிக்கெட் போட்டிக்கான 'ஆன்லைன்' அல்லது 'பிரின்டட்டிக்கெட்' மற்றும் நுழைவுச்சீட்டு வைத்து இருந்தால், அதை நடத்துநரிடம்காண்பித்து, மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணிக்கலாம். ஆனால், 'ஏசி'பேருந்துகளில் அனுமதி இல்லை.
போட்டி நடப்பதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பும், போட்டி முடிந்த மூன்று மணி நேரத்திற்குப் பின்னரும் பேருந்துகளில் கட்டணிமின்றி பயணிக்க ரசிகர்கள் அனுமதிக்கப்படுவர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

