sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 19, 2025 ,மார்கழி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

இடையூறான மின் கம்பம் அகற்றாமல் சிமென்ட் சாலை அமைத்த அவலம்

/

இடையூறான மின் கம்பம் அகற்றாமல் சிமென்ட் சாலை அமைத்த அவலம்

இடையூறான மின் கம்பம் அகற்றாமல் சிமென்ட் சாலை அமைத்த அவலம்

இடையூறான மின் கம்பம் அகற்றாமல் சிமென்ட் சாலை அமைத்த அவலம்


ADDED : ஜன 14, 2025 12:28 AM

Google News

ADDED : ஜன 14, 2025 12:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் அடுத்த ஊவேரி ஊராட்சியில், மணியாட்சி துணை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து, சாமந்திபுரம் மற்றும் மணியாட்சி ஏரிக்கரை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை குறுக்கே, இடையூறாக மின் கம்பம் உள்ளது.

அதனால், இந்த சாலை வழியாக, டிராக்டர் மற்றும் டிப்பர் லாரிகள் செல்ல முடியவில்லை. குறிப்பாக, ஏரிக்கரை ஓரம் விவசாய நிலங்களில் இருந்து நெல், காய்கறி உள்ளிட்ட விளைபொருட்கள் மற்றும் உர மூட்டைகள் எடுத்து செல்லும் போது, வீடுகளின் சுற்றுச்சுவர் மீது மோதி விபத்துக்குள்ளாக வேண்டியுள்ளது.

மின் வாரிய அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும், இடையூறான மின் கம்பத்தை அகற்ற முன்வரவில்லை.

மேலும், அகற்ற கணிசமான தொகை கொடுத்தால், மின் கம்பத்தை அகற்றுவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர் என, குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், ஊராட்சி நிர்வாகம் சார்பில், சாலையின் நடுவே இடையூறாக இருந்த மின் கம்பத்தை அகற்றாமல், புதிய சிமென்ட் சாலை அமைத்துள்ளனர்.

எனவே, மணியாட்சி கிராமத்தில் சாலை நடுவே, வாகனங்களுக்கு இடையூறாக இருக்கும் மின் கம்பத்தை மாற்றி அமைக்க, சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மணியாட்சி கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us