ADDED : மார் 15, 2024 12:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்:ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் முரளி, 35. இருங்காட்டுக்கோட்டையில் உள்ள கிரவுண்டெக் சர்பேஸ்' தனியார் தொழிற்சாலையில், இரண்டு நாட்களாக கூரை அமைக்கும் பணியில் ஈடுப்பட்டு வந்தார்.
இந்த நிலையில், நேற்று, பிற்பகல் 12:00 மணிக்கு, பாதுகாப்பு சாதனங்கள் ஏதுமின்றி, 40 அடி உயரத்தில் கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக, மேலே இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.
ஸ்ரீபெரும்புதுார் போலீசார் உடலை மீட்டு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

