/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நத்தப்பேட்டை சாலையோரத்தில் படர்ந்துள்ள முட்செடிகள்
/
நத்தப்பேட்டை சாலையோரத்தில் படர்ந்துள்ள முட்செடிகள்
நத்தப்பேட்டை சாலையோரத்தில் படர்ந்துள்ள முட்செடிகள்
நத்தப்பேட்டை சாலையோரத்தில் படர்ந்துள்ள முட்செடிகள்
ADDED : அக் 21, 2024 01:50 AM

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் மாநகராட்சி, நத்தப்பேட்டை, தண்டுமாரியம்மன் கோவில் வெங்கடேஸ்வரா நகரில் இருந்து திருவீதிபள்ளம், தாலுகா போலீஸ் நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையில் இருபுறமும் சீமைகருவேல முட்செடிகள் படர்ந்து வளர்ந்துள்ளன.
இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும்போது, இச்செடிகளில் உள்ள கூர்மையான முட்கள் பதம் பார்த்து விடுகின்றன.
மேலும், இந்த சீமை கருவேல முட்செடிகள் எதிரே வரும் வாகனங்களை மறைத்து விடுவதால், மின்விளக்கு வசதி இல்லாத அப்பகுதியில், இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில், வெங்கடேஸ்வரா நகர் பிரதான சாலையோரத்தில் படர்ந்து வளர்ந்துள்ள சீமைகருவேல முட்செடிகளை வேருடன் அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.