sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

விமானத்தில் கோளாறு சுற்றுலா பயணியர் அவதி

/

விமானத்தில் கோளாறு சுற்றுலா பயணியர் அவதி

விமானத்தில் கோளாறு சுற்றுலா பயணியர் அவதி

விமானத்தில் கோளாறு சுற்றுலா பயணியர் அவதி


ADDED : ஏப் 30, 2025 12:17 AM

Google News

ADDED : ஏப் 30, 2025 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகர் அபுதாபியில் இருந்து சென்னைக்கு, 'ஏர் அரேபியா' ஏர்லைன்ஸ் விமானம் 192 பேருடன், நேற்று அதிகாலை 4:15 மணிக்கு வந்தது.

இதே விமானம், மீண்டும் காலை 5:05 மணிக்கு அபுதாபிக்கு புறப்படுவது வழக்கம். இதில் பயணம் செய்ய 182 பயணியர், 'புக்கிங்' செய்திருந்தனர். அவர்கள் அனைத்து சோதனைகளையும் முடித்து விமானத்தில் அமர்ந்தனர். விமானம் 'ரன்வே'யில் ஓடத் துவங்கிய போது, திடிரென தொழில்நுட்ப கோளாறு ஏறப்பட்டுள்ளது. இதையடுத்து விமானம் அவசரமாக நிறுத்தப்பட்டது. கோளாறு சரி செய்யப்பட்டு காலை 7:00 மணிக்கு புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டது.

நேரம் கடந்தும் விமானம் புறப்படுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. ஆத்திரமடைந்த பயணியர், விமான நிறுவன அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். பின், விமான நிலைய ஓய்வு அறை பகுதியில் தங்க வைக்கப்பட்டனர். விமான பொறியாளர் குழு முயற்சித்தும், விமான கோளாறை சரிசெய்ய முடியவில்லை. இதையடுத்து விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பயணியர் அனைவரும் விமான நிறுவனம் ஏற்பாடு செய்த ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர். விமானம் இன்று அதிகாலை புறப்பட்டு செல்லும் எனக் கூறப்படுகிறது.

***






      Dinamalar
      Follow us