/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
3 பி.டி.ஓ.,க்கள் பணியிட மாற்றம்
/
3 பி.டி.ஓ.,க்கள் பணியிட மாற்றம்
ADDED : நவ 07, 2024 09:36 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் அவ்வப்போது நிர்வாக காரணங்களால் பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம்.
அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மூன்று வட்டார வளர்ச்சி அலுவலர்களை இடமாற்றம் செய்து, கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார்.
அந்த வகையில், ஸ்ரீபெரும்புதுார் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலாஜி, ஊரக வளர்ச்சி முகமைக்கும், உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன், ஊரக வளர்ச்சி முகமையின் கண்காணிப்பாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
மேலும், ஊரக வளர்ச்சி முகமை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துசுந்தரம், குன்றத்துார் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.