ADDED : செப் 23, 2025 10:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் அருகே, மளிகை கடையில் குட்கா விற்பனைக்காக வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
ஒரகடம் அருகே, மாத்துார் கிராமத்தில் உள்ள மளிகை கடைகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக, ஒரகடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் படி, மாத்துார், அம்பேத்கர் தெருவில் உள்ள மளிகை கடை ஒன்றில், போலீசார் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதில், ஹான்ஸ், விமல், ஸ்வாகத் உள்ளிட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.
இதையடுத்து, 20,000 ரூபாய் மதிப்புள்ள 6 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார், கடையின் உரிமையாளர்களான, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அச்சத் உத் ஜமான், 35, அஜிபுர் இஸ்லாம், 21, இருவரை கைது செய்தனர்.