sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பெண்ணிடம் செயின் பறிப்பு படப்பையில் இருவர் கைது

/

பெண்ணிடம் செயின் பறிப்பு படப்பையில் இருவர் கைது

பெண்ணிடம் செயின் பறிப்பு படப்பையில் இருவர் கைது

பெண்ணிடம் செயின் பறிப்பு படப்பையில் இருவர் கைது


ADDED : நவ 24, 2024 07:41 PM

Google News

ADDED : நவ 24, 2024 07:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

படப்பை:படப்பை, ஆதனஞ்சேரியில், தனியாக இருந்த 70 வயது மூதாட்டியிடம், இளைஞர்கள் இருவர் கத்தியைக் காட்டி மிரட்டி, செயின் பறித்துச் சென்றனர்.

அப்போது அந்த மூதாட்டி கூச்சலிட்டதால், அங்கிருந்தோர் அந்த இளைஞர்கள் இருவரையும் பிடிக்க முயன்றனர். அப்போது, செயினை துாக்கி வீசி எறிந்து விட்டு, அருகிலுள்ள ஏரியின் புதர் மண்டிய பகுதியில் இளைஞர்கள் பதுங்கினர்.

இதுகுறித்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த மணிமங்கலம் போலீசார், தேடுதல் பணியில் ஈடுபட்டு இளைஞர்கள் இருவரையும் பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள், துாத்துக்குடியைச் சேர்ந்த பேரீன்பநாதன்,20, திருநெல்வெலி மாவட்டத்தைச் சேர்ந்த அபேஜ் பிராகஷ்,19, என தெரிந்தது.

இருவரும் படப்பை அருகே தங்கி,'ஆன்லைன்' உணவு 'டெலிவரி' செய்யும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டு, வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது.

இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us