/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மது போதையில் ரகளை இருவர் போலீசில் சரண்
/
மது போதையில் ரகளை இருவர் போலீசில் சரண்
ADDED : பிப் 05, 2024 07:01 AM
சென்னை : வியாசர்பாடி, பெரியார் நகர், அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் தனசெல்வம், 41.
இவர், பெரம்பூர் சுப்பிரமணிய தெருவில் துரித உணவகம் நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில், மது போதையில் இவரது கடைக்கு வந்த இருவர், சில்லி சிக்கன் கேட்டுஉள்ளனர்.
அதை சமைத்துக் கொடுப்பதற்குள், மது போதையில் இருந்த விஜய் மெல்வின் என்பவர், அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த வாடிக்கையாளர் ஒருவரை கத்தியால் வெட்ட முயன்றார்.
தொடர்ந்து, கடையில் உள்ள பொருட்கள் மற்றும்தெருவில் நிறுத்தியிருந்த வாகனங்களை கத்தியால் சேதப்படுத்திவிட்டு, இருவரும் அங்கிருந்து தப்பினர்.
இதையடுத்து, மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட பெரம்பூரைச் சேர்ந்த விஜய் மெல்வின், 20, மற்றும் சுரேஷ் பாபு, 21, ஆகிய இருவரும், நேற்று காலை போலீசில் சரணடைந்தனர்.
இதுகுறித்து, செம்பியம் போலீசார் விசாரிக்கின்றனர்.

