/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தடுப்பு இல்லாத தரைப்பாலத்தால் இளையனார்வேலுாரில் விபத்து அபாயம்
/
தடுப்பு இல்லாத தரைப்பாலத்தால் இளையனார்வேலுாரில் விபத்து அபாயம்
தடுப்பு இல்லாத தரைப்பாலத்தால் இளையனார்வேலுாரில் விபத்து அபாயம்
தடுப்பு இல்லாத தரைப்பாலத்தால் இளையனார்வேலுாரில் விபத்து அபாயம்
ADDED : ஆக 04, 2025 11:34 PM

வாலாஜாபாத், இளையனார்வேலுார் சாலை தரைப்பாலத்திற்கு தடுப்பு இல்லாததால், விபத்து அபாயம் ஏற் பட்டுள்ளது.
இளையனார்வேலுாரில் இருந்து, வள்ளிமேடு வழியாக வாலாஜாபாத் சென்றடையும் சாலை உள்ளது.
இளையனார்வேலுார், சித்தாத்துார் கிராமத்தினர் இச்சாலை வழியை பயன்படுத்தி, வள்ளிமேடு, கம்பராஜபுரம், தம்மனுார், அவளூர் மற்றும் வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இச்சாலையில், காவாந்தண்டலம் செய்யாற்றில் இருந்து, கம்பராஜபுரம் வழியாக செல்லும் நீர்வரத்து கால்வாயின் இணைப்பாக தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தரைப்பாலத்தின் இருபுறமும், இடைவெ ளி விட்டு தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், அது போதிய அளவு பாதுகாப்பானதாக இல்லாததால், விபத்து அபாயம் உள்ளது.
எனவே, இந்த தரைப்பாலத்திற்கு மு ழுமையான தடுப்பு ஏற்படுத்த அப்பகுதி வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

