sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

அகற்றப்படாத குப்பையால் மாம்பாக்கத்தில் சுகாதார சீர்கேடு

/

அகற்றப்படாத குப்பையால் மாம்பாக்கத்தில் சுகாதார சீர்கேடு

அகற்றப்படாத குப்பையால் மாம்பாக்கத்தில் சுகாதார சீர்கேடு

அகற்றப்படாத குப்பையால் மாம்பாக்கத்தில் சுகாதார சீர்கேடு


ADDED : ஆக 22, 2025 02:04 AM

Google News

ADDED : ஆக 22, 2025 02:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:மாம்பாக்கம், பொன்னியம்மன் கோவில் தெருவில் அகற்றப்படாமல் உள்ள குப்பைகளால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.

ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், மாம்பாக்கம் கிராமம் பொன்னியம்மன் கோவில் தெரு வழியாக, மாம்பாக்கம் அரசு பள்ளி, ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு ஏராளமானோர் சென்று வருகின்றனர்.

இந்நிலையில், ஊராட்சி துாய்மை பணியாளர்கள், அப்குதியில் உள்ள வீடுகளுக்கு சென்று முறையாக குப்பையை சேகரிக்காததால், பொன்னியம்மன் கோவில் தெருவில் குப்பை கொட்டி வருகின்றனர்.சாலையில் கொட்டப்பட்டுள்ள குப்பையை துாய்மை பணியாளர்கள் அகற்றுவது இல்லை.

இதனால், ஆங்காங்கே சாலையோரங்களில் குப்பை குவிந்து உள்ளது.

இதனால், அவ்வழியாக செல்வோர் முகம் சுளித்தபடி செல்கின்றனர். மேலும், அப்பகுதி முழுதும் சுகாதார சீர்கேடு நிலவுவதோடு, கொசு உற்பத்தியும் மிகுதியாகி, மக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.

எனவே, மாம்பாக்கம் ஊராட்சியில் உள்ள அனைத்து தெருக்களிலும் குப்பையை அகற்ற, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us