/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையோரம் படர்ந்த மரக்கிளைகளால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு
/
சாலையோரம் படர்ந்த மரக்கிளைகளால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு
சாலையோரம் படர்ந்த மரக்கிளைகளால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு
சாலையோரம் படர்ந்த மரக்கிளைகளால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு
ADDED : அக் 02, 2024 11:28 PM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், படூர் கூட்டுச் சாலையில் இருந்து, நெல்வாய் கூட்டுச்சாலை செல்லும் சாலை உள்ளது. சுற்றிவட்டார கிராமங்களை சேர்ந்தோர், இச்சாலையை பயன்படுத்தி, உத்திரமேரூர் சென்று வருகின்றனர்.
இச்சாலையில், அமராவதிபட்டிணம் அடுத்து குண்ணவாக்கம் கூட்டுச்சாலை அருகே சாலையோரத்தில் பல்வேறு மரங்கள் வளர்ந்துள்ளன. இந்த மரங்கள் சாலையில் படர்ந்து உள்ளதால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விட முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
மேலும், இச்சாலையில் மின்விளக்கு வசதி இல்லாததால், இரவில் வாகன ஓட்டிகளின் உடலை மரங்கள் பதம் பார்க்கின்றன. எனவே, குண்ணவாக்கம் கூட்டுச்சாலை அருகே, சாலையில் படர்ந்துள்ள மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.