/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூருக்கு நேரடி பஸ் வசதி இல்லாமல் கிராமவாசிகள் அவதி
/
உத்திரமேரூருக்கு நேரடி பஸ் வசதி இல்லாமல் கிராமவாசிகள் அவதி
உத்திரமேரூருக்கு நேரடி பஸ் வசதி இல்லாமல் கிராமவாசிகள் அவதி
உத்திரமேரூருக்கு நேரடி பஸ் வசதி இல்லாமல் கிராமவாசிகள் அவதி
ADDED : நவ 03, 2024 01:36 AM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்தில் விச்சூர், திருவானைக்கோவில், ராஜாம்பேட்டை, கரும்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள், ஒன்றியத்தின் கடைக்கோடியில் உள்ளன.
இந்த கிராமங்களைச் சேர்ந்தோர் உத்திரமேரூரில் உள்ள பி.டி.ஓ., அலுவலகம், தாசில்தார் அலுவலகம் மற்றும் சார் - பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகத்திற்கு அடிக்கடி செல்கின்றனர்.
இப்பகுதியில் இருந்து உத்திரமேரூர் செல்ல பேருந்து வசதி இல்லாததால், 20 கி.மீ., துாரமுள்ள செங்கல்பட்டு சென்று, அங்கிருந்து பேருந்து பிடித்து உத்திரமேரூர் செல்ல வேண்டும் என்ற நிலை நீண்ட காலமாக தொடர்கிறது. அதேபோல், அருங்குன்றம், காவணிப்பாக்கம் உட்பட சுற்றுவட்டார கிராமங்களுக்கும், உத்திரமேரூர் செல்ல நேரடி பேருந்து சேவை இல்லை.
இக்கிராமங்களைச் சேர்ந்தோர், 25 கி.மீ., துாரத்தில் உள்ள காஞ்சிபுரம் சென்று, அங்கிருந்து பேருந்து பிடித்து உத்திரமேரூர் செல்லும் நிலை உள்ளது.
இதனால், கூடுதலான துார பயணம், அலைச்சல், காலவிரயம் போன்ற பல பிரச்னைகளால் அப்பகுதிவாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, திருவானைக்கோவில் கிராம வாசிகள் கூறியதாவது:
உத்திரமேரூருக்கு நேரடி பேருந்து வசதி இல்லாததால், உத்திரமேரூரில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு காலையில் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியவில்லை.
மேலும், போக்குவரத்து பிரச்னையால், உத்திரமேரூரில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில் இப்பகுதி மாணவர்கள் சேர முடியாத நிலை உள்ளது.
எனவே, இக்கிராமங்களை ஒருங்கிணைத்தபடி, உத்திரமேரூர் வரை நேரடி அரசு பேருந்து சேவையை துவக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.