sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

உத்திரமேரூர் கல்வெட்டு கோவில் வேலியில் விதிமுறைகள் மீறி பிளக்ஸ் பேனர் வைப்பு

/

உத்திரமேரூர் கல்வெட்டு கோவில் வேலியில் விதிமுறைகள் மீறி பிளக்ஸ் பேனர் வைப்பு

உத்திரமேரூர் கல்வெட்டு கோவில் வேலியில் விதிமுறைகள் மீறி பிளக்ஸ் பேனர் வைப்பு

உத்திரமேரூர் கல்வெட்டு கோவில் வேலியில் விதிமுறைகள் மீறி பிளக்ஸ் பேனர் வைப்பு


ADDED : அக் 19, 2025 09:47 PM

Google News

ADDED : அக் 19, 2025 09:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்: உத்திரமேரூரில், கல்வெட்டு கோவில் கம்பி வேலியில், விதிமுறைகள் மீறி 'பிளக்ஸ் பேனர்' வைப்பதை தடுக்கும்படி, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகே, ஸ்ரீதேவி பூதேவி சமேத வைகுண்ட பெருமாள் கோவில் உள்ளது.

தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலான இக்கோவிலில், குடவோலை தேர்தல் முறையை விளக்கும் கல்வெட்டு உள்ளது.

இக்கோவிலை பார்வையிட வெளிநாட்டு சுற்றுலா பயணியர், தொல்லியல் ஆராய்ச்சி மாணவர்கள், உள்ளூர் பக்தர்கள் ஆகியோர் தினமும் வந்து செல்கின்றனர்.

கோவிலின் இரும்பு கம்பி தடுப்பு வேலியின் மீது, பிளக்ஸ் பேனர் வைக்க அனுமதி இல்லை.

ஆனால், சமீப நாட்களாக இந்த இரும்பு கம்பி தடுப்பு வேலியின்மீது கல்வி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், துணிக்கடைகள் ஆகியவை, பிளக்ஸ் பேனர்கள் வைத்து வருகின்றன.

இதனால், கல்வெட்டு கோவிலின் இரும்பு கம்பி தடுப்புவேலி, பிளக்ஸ் பேனர் வைக்கும் இடமாக மாறி வருகிறது.

எனவே, பிளக்ஸ் பேனர்களை அகற்ற, தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us