/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கைப்பந்து போட்டியில் வாலாஜாபாத் முதலிடம்
/
கைப்பந்து போட்டியில் வாலாஜாபாத் முதலிடம்
ADDED : ஆக 20, 2025 10:42 PM

காஞ்சிபுரம்:கைப்பந்து போட்டியில், வாலாஜாபாத் அகத்தியா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.
எலன் ஷர்மாவின், 2 வது நினைவு கைப்பந்துப் போட்டி சென்னை சோழிங்கநல்லுாரில் நேற்று நடந்தது. பல்வேறு தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-- - மாணவியர் பங்கேற்றனர்.
இதில், செயின்ட் மேரிஸ் அணியை 15:8 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வாலாஜாபாத் அகத்தியா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவர் அணி வெற்றி பெற்றது.
இறுதியாக, அனிதா மெட்ரிக் பள்ளி அணியை, 2,3-14 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி, அகத்தியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்கள் பிரிவு அணியினர் சாம்பியன் பட்டத்தை வென்றனர். இவர்களுக்கு, பள்ளி செயலர் சாந்தி மற்றும் முதல்வர் தேன்மொழி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.