sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சேதமடைந்த பேரணக்காவூர் சாலையில் சிறு மழைக்கே தேங்கிய தண்ணீர்

/

சேதமடைந்த பேரணக்காவூர் சாலையில் சிறு மழைக்கே தேங்கிய தண்ணீர்

சேதமடைந்த பேரணக்காவூர் சாலையில் சிறு மழைக்கே தேங்கிய தண்ணீர்

சேதமடைந்த பேரணக்காவூர் சாலையில் சிறு மழைக்கே தேங்கிய தண்ணீர்


ADDED : செப் 26, 2024 12:13 AM

Google News

ADDED : செப் 26, 2024 12:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், பேரணக்காவூர் கிராமத்தில் இருந்து, சாலவாக்கம் மற்றும் வாலாஜாபாத், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல சாலை உள்ளது.

இச்சாலையை பயன்படுத்தி அப்பகுதியினர், அருங்குன்றம்- - சாலவாக்கம் இணைப்புச் சாலை பகுதிக்கு வந்து அங்கிருந்து பேருந்து பிடித்து பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர்.

இந்நிலையில், இந்த சாலை பகுதி சில ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி பஞ்சராவதோடு, மழை நேரங்களில் சாலை பள்ளங்களில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

அவசர நேரங்களில் இச்சாலையை உடனடியாக கடக்க முடியாமல் சிரமப்படும் நிலை உள்ளது.

எனவே, பழுதடைந்த இச்சாலையை சீர் செய்து தர, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதியினர் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us