sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மொபைல் போன் மூலம் பம்ப்செட் கட்டுபடுத்தும் கருவி மானியத்தில் பெற விண்ணப்பிக்கலாம்

/

மொபைல் போன் மூலம் பம்ப்செட் கட்டுபடுத்தும் கருவி மானியத்தில் பெற விண்ணப்பிக்கலாம்

மொபைல் போன் மூலம் பம்ப்செட் கட்டுபடுத்தும் கருவி மானியத்தில் பெற விண்ணப்பிக்கலாம்

மொபைல் போன் மூலம் பம்ப்செட் கட்டுபடுத்தும் கருவி மானியத்தில் பெற விண்ணப்பிக்கலாம்


ADDED : ஜன 22, 2025 07:13 PM

Google News

ADDED : ஜன 22, 2025 07:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:தமிழக அரசின் வேளாண்மை பொறியியல் துறை சார்பில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய மொபைல் போனால் இயங்கும் பம்ப் செட்டு கட்டுப்படுத்தும் கருவி வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின்கீழ் வழங்கப்படுகிறது.

விவசாயிகள் இரவு நேரங்கள் மற்றும் மழைக்காலங்களில் வயல்வெளிகளில் உள்ள பம்ப் செட்டுகளை இயக்கச் செல்கிறார்கள். அவ்வாறு செல்லும்போது, பாம்புக்கடி, விஷப்பூச்சுக்கடி உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்க நேரிடுகிறது.

இதை தவிர்க்கும் வகையில், பம்ப் செட்டுகளை வீடுகளில் இருந்தபடியே இயக்கும் கருவி மானியத்தில் வழங்கப்படுகிறது. இதன் மூலம் விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் அமைக்கப்பட்டுள்ள பம்ப் செட்டுகளை தொலைவில் இருந்து மொபைல் போன் மூலம் இயக்கி கண்காணிக்கவும் மோட்டாரை நிறுத்தவும் முடியும்.

ஆதிதிராவிடர் வகுப்பினர், பழங்குடியினர், சிறு விவசாயிகள், குறு விவசாயிகள் மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 7,000 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. இதர விவசாயிகளுக்கு மொத்த விலையில், 40 சதவீதம் அல்லது 5,000 ரூபாய் மானியமாக வேளாண் பொறியியல் துறை வழங்குகிறது

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள், வேளாண் பொறியியல் அலுவலர்களை 94440 73322 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us