ADDED : ஜூலை 14, 2025 11:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர், பழையசீவரத்தில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் ஒருவர் உயிரிழந்தார்.
பழையசீவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்துரு, 28; தனியார் தொழிற்சாலை ஊழியர். இவர், நேற்று முன்தினம் மாலையில், குளிப்பதற்காக தன்னுடைய வீட்டில் உள்ள வாட்டர் ஹீட்டர் மிஷினை ஆன் செய்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக சந்துரு மீது மின்சாரம் பாய்ந்ததையடுத்து, மயக்கமடைந்தார்.
அங்கிருந்தவர்கள் அவரை, வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறினார். சம்பவம் குறித்து சாலவாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.