sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கன்னியாகுமரி

/

குமரியில் கடல் நீர்மட்டம் குறைந்து படகு சேவை பாதிப்பு

/

குமரியில் கடல் நீர்மட்டம் குறைந்து படகு சேவை பாதிப்பு

குமரியில் கடல் நீர்மட்டம் குறைந்து படகு சேவை பாதிப்பு

குமரியில் கடல் நீர்மட்டம் குறைந்து படகு சேவை பாதிப்பு


ADDED : ஜூலை 08, 2024 11:49 PM

Google News

ADDED : ஜூலை 08, 2024 11:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில் : கன்னியாகுமரியில் தொடர்ந்து இரண்டாவது நாளாக கடல் நீர்மட்டம் குறைந்ததை தொடர்ந்து படகு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு பூம்புகார் போக்குவரத்து கழகம் படகுகளில் சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்கிறது. வழக்கமாக காலை 8:00 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கி மாலை 4:00 மணி வரை தொடர்ந்து நடைபெறும் .

இரண்டு நாட்களாக கன்னியாகுமரியில் கடல் நீர் மட்டத்தில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. காலை நேரத்தில் கடல் நீர் குறைந்து பாறைகள் வெளியே தெரிகிறது. காலை 10:00 மணிக்கு பின்னர் நீர்மட்டம் சிறிது சிறிதாக உயர்ந்து படகு இயக்கும் அளவுக்கு நிலைமை சீராகிறது.

இதனால் நேற்றும் நேற்று முன்தினமும் காலை 8:00 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து 10:00 மணிக்கு பின்னர் தொடங்கியது. அதிகாலை முதலே இதற்காக வரிசையில் காத்திருந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

பொதுவாக அமாவாசை, பவுர்ணமி காலங்களில் கடலில் ஏற்படும் இயல்பான மாற்றம் தான் என்று இங்குள்ள வியாபாரிகள் கூறுகின்றனர்.






      Dinamalar
      Follow us