/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
நீர்பிடிப்பில் தொடர் மழை 116 அடியானது பெரியாறு அணை விவசாயிகள் மகிழ்ச்சி
/
நீர்பிடிப்பில் தொடர் மழை 116 அடியானது பெரியாறு அணை விவசாயிகள் மகிழ்ச்சி
நீர்பிடிப்பில் தொடர் மழை 116 அடியானது பெரியாறு அணை விவசாயிகள் மகிழ்ச்சி
நீர்பிடிப்பில் தொடர் மழை 116 அடியானது பெரியாறு அணை விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : மே 21, 2024 07:51 AM
கூடலுார், : நீர்பிடிப்பில் பெய்த தொடர்மழையால் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 116 அடியாக உயர்ந்தது.
தென்மேற்குப் பருவமழை வழக்கத்தைவிட முன்னதாக மே 19ல் துவங்கியது. கடந்த 2 தினங்களாக முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி பெரியாறில் 40 மி.மீ., தேக்கடியில் 7.4 மி.மீ., மழை பதிவானது. இதனால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 620 கன அடியாக அதிகரித்தது.
நீர்மட்டமும் 116 அடியாக உயர்ந்தது(மொத்த உயரம் 152 அடி). தமிழகப்பகுதிக்கு குடிநீருக்காக100 கன அடி திறக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 1916 மில்லியன் கன அடியாகும். நேற்று பகல் முழுவதும் தொடர்ந்து நீர்ப்பிடிப்பில் மழை பெய்ததால் நீர்மட்டம் மேலும் உயரும் வாய்ப்புள்ளது.
விவசாயிகள் மகிழ்ச்சி: ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் வாரத்தில் கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக நெல் சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படும். அணையில் நீர் இருப்பைப் பொறுத்து திறக்கும் தேதி மாறுபடும். நான்கு மாதங்களாக கடுமையான வெப்பத்தால் கோடை மழையின்றி அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வந்தது.
முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கும் வாய்ப்பு குறைவு என விவசாயிகள் கவலையில் இருந்தனர். தற்போது பெய்து வரும் கனமழையால் அணையின் நீர்மட்டம் உயரத் துவங்கியுள்ளது. இதனால் ஜூன் முதல் வாரத்தில் நெல் சாகுபடிக்காக தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

