/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
'கூகுள் பே'யில் லஞ்சம் 3 போலீசார் சஸ்பெண்ட்
/
'கூகுள் பே'யில் லஞ்சம் 3 போலீசார் சஸ்பெண்ட்
ADDED : ஜூன் 26, 2025 02:30 AM
நாகர்கோவில்:லாரி டிரைவர்களிடம் லஞ்சம் பெற்றதாக சிறப்பு எஸ்.ஐ., உட்பட மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம், புதுக்கடை, களியக்காவிளை, ஆரல்வாய்மொழி பகுதிகளில், கனிமவள லாரி டிரைவர்களிடம் சில போலீசார் லஞ்சம் பெறுவதாக புகார் வந்தது. இதுகுறித்து, எஸ்.பி., ஸ்டாலின் விசாரித்தார்.
அதில், கனரக வாகனங்களின் டிரைவர்களிடம், 'கூகுள் பே' செயலி வாயிலாக, பணம் வசூல் செய்தது உறுதி செய்யப்பட்டது. மார்த்தாண்டம் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு சிறப்பு எஸ்.ஐ., ராஜா ஸ்டாலின், ஏட்டு சாலமன், டிரைவர் திபு ஆகிய மூவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
அதேபோல், மார்த்தாண்டம் சிறப்பு எஸ்.ஐ., ஜான் டேவிட், அர்ஜுனன், ஏட்டு ஸ்டாலின் ஆகியோர் ரோந்து பணியின்போது, லாரி டிரைவர்களிடம் கூகுள் பே வாயிலாக பணம் பெற்றதை தொடர்ந்து, ஜான் டேவிட் தென்தாமரைக்குளம் காவல் நிலையத்துக்கும், அர்ஜுனன் சுசீந்திரத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
புதுக்கடை ஸ்டேஷனில் பணிபுரியும், பெண் போலீஸ் ஒருவரும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.